Wednesday, October 6, 2010
தினம் ஒரு வேதவசனம்
நான் புமியை அஸ்திபரப்படுத்தி,சீயோனை நோக்கி:நீ என் ஜனமென்று சொல்வதற்க்காக ,நான் என் வார்த்தையை உன் வாயிலே அருளி,என் கரத்தின் நிழலினால் உன்னை மறைக்கிறேன்.
ஏசாயா51:15-16
Tuesday, October 5, 2010
தினம் ஒரு வேதவசனம்
சங்கீதம்:46:1
Monday, July 19, 2010
தினம் ஒரு வேதவசனம்
சங்கீதம் 107:6
Thursday, June 3, 2010
தினம் ஒரு வேதவசனம்
குலுக்குகிற சேனைகளின் கர்த்தர் என்கிற நாமமுள்ளவர்.
ஏசாயா:51:15
Wednesday, June 2, 2010
தலைமுடி பராமரிப்பு டிப்ஸ் _பாகம்1
கோடை கால முடி பராமரிப்பு:
1.பெரும்பாலும் சம்மரில் ஹர் மிகவும் ட்ரையாகி விடுகிறது.சோ,conditioner ஏதாவது உபயோகப்படுத்தலாம்.
2.அழகுக்கான கிளிப்புகள் ஏதேனும் பயன்படுத்தினால் அவை தலைமுடியை பாதிக்காதவண்ணம் பார்த்துவாங்க வேண்டும்.சில கிளிப்புகளில் முடியும் சேர்ந்துவரும்.
3.காற்று அதிகமாக உள்ள இடங்களில் scarf அணிந்து கொள்வதால் முடி சிக்கவதும் ,உடைந்துபோகாமலும் இருக்கும்.
4.எலுமிச்சைபழம் சேர்த்து குளித்துவர dandruff குறையும் ,உடல் குளிர்ச்சி அடையும்.
5.அதிக சுடான மற்றும் குளிர்ந்த தண்ணீரில் குளிர்ப்பதை தடுக்கவும்.
6.Baking soda ¼ cup இதனுடன் shampoo or conditioner சேர்த்து குளித்தால் முடி மிகவும் அடர்த்தியாக வளரும்.இது நான் படித்த தகவல்.நான் பயன்படுத்தியது இல்லை.
இவை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்க vote மற்றும் commentsயை போடலாமே.
தினம் ஒரு வேதவசனம்
சங்கீதம் 55:22
Tuesday, June 1, 2010
தினம் ஒரு வேதவசனம்
உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம் பண்ணுவேன்;
ஏசாயா 41:10
Tuesday, July 7, 2009
சத்தமில்லாமல் ஒரு சமூகப் புரட்சி
ஆம், நிலம்பூர் கிராமத்தில் வரதட்சணைக் கொடுமை பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டதன் காரணமாக அங்கு வரதட்சணையற்ற திருமணங்கள் அதிகளவில் நடந்து வருகிறது.
திருமணமங்கள் என்பது சொர்கத்தில் நிச்சயிக்கப்பட்ட காலம் மாறி ரொக்கத்திலும், சவரனிலும் நிர்ணயிக்கப்படும் காலமாகிவிட்டது. வரதட்சணை கொடுக்க முடியாத காரணத்தால் எத்தனையோ கன்னிகள் முதிர் கன்னிகளாகிவிட்டனர்.
இந்த வரதட்சணைக் கொடுமை இந்தியாவின் பல நகரங்களிலும் தலை விரித்தாடுகிறது. அதிலும் கேரளாவில் இது அதிகம். இதற்கெல்லாம் எங்கு வழி பிறக்கப் போகிறது என்றுதான் பல பெற்றோர்களும் புலம்பிக் கொண்டிருக்கின்றனர்.
வழி பிறந்துள்ளது நிலம்பூர் கிராமத்தில்.
![]() |
முதலில் சொந்தமாக வீடில்லாமல் வாழ்பவர்களை கண்டறிந்தார். அவர்கள் ஏன் சொந்தமாக வீடில்லாமல் வாழ்கிறார்கள் என்பதை ஆராய்ந்த போது, பலரும், தங்களது மகள் திருமணத்திற்காக சொந்த வீட்டை விற்று வரதட்சணை வழங்கியிருப்பது தெரிய வந்தது.
வரதட்சணை பிரச்சினை இந்த அளவிற்கு விஸ்வரூபம் எடுத்திருப்பது குறித்து கவலைப்பட்டார். கவலைப்பட்டதோடு நின்றுவிடாமல், அதனை மாற்ற நடவடிக்கையும் எடுத்தார். வரதட்சணையை ஒழிக்கும் நோக்கத்தோடு ஒரு குழுவை அமைத்தார்.
இந்த குழுவினர், வீடு வீடாகச் சென்று வரதட்சணைக் கொடுமையால் பல குடும்பங்கள் சீரழிந்து கிடப்பதை எடுத்துக் கூறி, அதனால் எத்தனை பெண்களின் வாழ்க்கையே கேள்விக்குறியாகி இருக்கிறது என்பதையும் பட்டியலிட்டனர்.
இதோடு நின்றுவிடாமல் வரதட்சணை விழிப்புணர்வை ஏற்படுத்தும் தெருக் கூத்துகள், திரைப்பங்கள் காட்டப்பட்டன.
முதலில் இதற்கெல்லாம் எந்த பலனும் இல்லாமல் இருந்தது. ஆனால் நாளடைவில் மக்களின் மனதில் சிந்தனை ஓடியது. விழிப்புணர்வு ஏற்பட்டது. அப்படி விழிப்புணர்வை அடைந்த மக்களிடம், வரதட்சணை வாங்க மாட்டோம், கொடுக்கவும் மாட்டோம் என்று உறுதி மொழியும் வாங்கப்பட்டது.
அப்போதே அந்த கிராமத்தில் வரதட்சணை என்ற பேய் ஓடோடிவிட்டது.
![]() |
நிலம்பூர் கிராமத்திற்கு ஒரு விடிவெள்ளி தோன்றியது போல இந்தியாவிற்கும் ஒரு விடிவெள்ளி தோன்றினால் பல பெண்களின் வாழ்க்கை விடியும் என்பது உறுதி.
Monday, June 29, 2009
கடவுளும் டார்வின்னும்…
மாற்றம் நிறைந்ததுதான் வாழ்க்கையின்னு சொல்லுவாங்க…இதபத்தி யோசிச்சப்ப டார்வின்னோட பரிணமக் கொள்கைதான் தோணுச்சிங்க…டார்வின் சொல்லுறாரு குரங்குல இருந்துதான் மனிஷன் வந்தான்னு…இது காலப்போக்கில ஏற்ப்பட்ட மாற்றம்முன்னு…ஒரு செல்லுயிரிதான் முதல இருந்து பின்பு அது பல செல்லுயிரியாக மாறிச்சின்னு சொல்லுறாங்க….
இப்ப எனக்கு இதுல என்ன டவுட்டுன்ன குரங்கில இருந்து மனிஷன் வந்தான்னல அப்ப இவ்வளவு காலத்தில மனிஷலைருந்து ஏதோ பரிணம புது உயிரிதோன்றி இருக்கலாம்…அல்லது இப்பவும் குரங்குல இருந்து மனிதன் வரலாமே….இல்ல இது எல்லாம் சாத்தியம் இல்லை என்றால் அப்ப நமக்கு மேல ஒரு சக்தி அது தான் கடவுள் இருக்குன்னு நம்பனும் …அவருதான் எல்லாத்தையும் படைத்தாருன்னு நம்பனுதானே…
என்னுடைய சந்தேகத்திற்கு விளக்கம் தெரிந்தால் பின்னுட்டம் இடுங்க…அப்படியே ஓட்டும் போடுங்க பிடித்தால்…
Tuesday, June 23, 2009
ஒவ்வொரு பெண்ணும் அறிய வேண்டிய வாழ்வியல்
இந்தியத் திருநாட்டில் முதல் சட்டசபை பெண் உறுப்பினர், முதல் பெண் மருத்துவர் என்கிற பல சாதனைகளுடன் வரலாற்றுப் பக்களில் இடம்பிடித்த இவரின் வாழ்வியல், ஒவ்வொரு பெண்ணும் அறிந்துகொள்ள வேண்டிய வரலாறு. அதற்காகவே இங்கு நான் அதனை வெளியிடுகிறேன்.
ஒரு நாள் தமிழக சட்டசபையில் அனல் பறக்கும் விவாதம் நடந்தது. தமிழகத்தில் பல ஆண்டுகளாக, கோயில்களில் பொட்டுக்கட்டுதல் என்கிற 'தேவதாசி'முறை வழக்கத்திலிருந்தது. அது ஒழிக்கப்பட வேண்டும் என்பதே அனல் பறக்கும் விவாதத்திற்குக் காரணமாக இருந்தது.
பிற்படுத்தப்பட்ட குடும்பத்தில் பிறந்து.. தனது நெஞ்சுரத்தால் பெண் விடுதலைக்காகவும் தேவதாசி ஒழிப்புக்காகவும் தன்னை போராடிய அந்த வீரப்பெண், " 'தேவதாசி'முறை தமிழகத்திலிருந்து ஒழிக்கப்பட்டே தீரவேண்டும்.. வரும் காலத்தில் 'தேவதாசி' என்கிற பெயர் சரித்திரத்தில்கூட இடம்பெறக் கூடாது" என்று ஆவேசமாக முழக்கமிட்டார்.அந்தப்பெண்ணின் வீரமுழக்கத்தை மறுக்கும் விதமாக.. சத்தியமூர்த்தி அவர்கள், "தேவதாசிகள் என்பவர்கள் ஆண்டவனின் திருப்பணிக்காக அர்ப்பணிக்கப்பட்டவர்கள், அவர்கள் தேவர்களின் அதாவது தெய்வங்களின் அடிமை என்கிற புனிதத்தன்மை பெற்றவர்கள். அதை ஏன் ஒழிக்க வேண்டுமென்கிறீர்கள்?" என்று கேட்டார்.
சற்றும் தாமதிக்காமல்.. அந்தப் பெண், "தேவதாசி முறை புனிதமானது என்றால், தேவதாசி முறை ஆண்டவனின் திருப்பணிக்காக அர்ப்பணிக்கப்பட்டது என்றால், அந்தத் தொழிலை பிற்படுத்தப்பட்ட எங்கள் குலத்துப் பெண்கள் மட்டும்தான் செய்ய வேண்டுமா? உங்கள் உயர்ஜாதிக் குடும்பத்திலிருந்து எந்தப் பெண்ணையாவது தேவதாசி ஆக்குங்களேன்!" என்று அனல்தெறித்தார். சட்டசபையே ஒரு நொடி ஆடிப்போனது.
அந்தக் கனல் பொழிந்த குரலுக்குச் சொந்தக்காரர்தான் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி!
இந்தியத் திருநாட்டில் முதல் சட்டசபை பெண் உறுப்பினர் என்கிற வரலாற்றுப் பெருமைக்குச் சொந்தக்காரரான இவரின் வாழ்வியல், ஒவ்வொரு பெண்ணும் அறிந்துகொள்ள வேண்டிய வரலாறு.
1886 ஆம் வருடம் புதுக்கோட்டையில் நாராயணசாமிக்கும், சந்திரம்மாளுக்கும் மூத்தமகளாகப் பிறந்தார் முத்துலட்சுமி.
முத்துலட்சுமியின் குடும்பம் அன்று புதுக்கோட்டை சமஸ்தானத்தில் பெரும் மதிப்புக்குரிய குடும்பமாகத் திகழ்ந்தது. அவரது தந்தை நாராயணசாமி, மகாராஜா கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றியபோதும் கரைபடியாத கரம் என்பதால்... வீட்டுக்குள் நான்கு பிள்ளைகளையும் படிக்க வைக்க முடியாத பணப்பற்றாக்குறை ஏற்பட்டது.
மூத்த பெண்ணான முத்துலட்சுமியை பள்ளிப் படிப்போடு நிறுத்தி விடலாமா? என்று நாராயணசாமி நினைத்தபோது... முத்துலட்சுமியின் கல்வியறிவை முடக்கி அவரை கிணற்றுத் தவளையாக்கிவிட வேண்டாம் என, அவர் படித்த பள்ளி ஆசிரியர்கள் நாராயண சாமியிடம் கெஞ்சினார்கள்.
முத்துலட்சுமி, அவர்களின் கெஞ்சுதலுக்கு நன்றி உபகாரமாக, பள்ளிக்கூடத்திலேயே அவர் ஒருவர் மட்டும் மெட்ரிக்குலேஷன் தேர்வில் வெற்றி பெற்று பள்ளியின், ஆசிரியர்களின் மானத்தைக் காப்பாற்றினார்.
அதற்கடுத்து புதுக்கோட்டை அரசர் கல்லூரியில் சேர்ந்தபோது, அவருக்கு கல்லூரி நிர்வாகம் ரத்தினக் கம்பள வரவேற்புத் தந்தது. அங்கே அவரது ஆங்கிலப் புலமை... ஆசிரியர்களை அசரவைத்தது.
அத்தனை திறமையும், புத்திக்கூர்மையும் கொண்ட முத்துலட்சுமிக்கு கண்பார்வைக் கோளாறு என்கிற குறையிருந்தது. இருப்பினும், படிப்பையே தனது பார்வையாக மாற்றிக்கொண்டார். அடுத்து, அவருக்குள்ளிருந்த உடல்நலக் குறைபாடு அவரை மருத்துவத் துறையில் கால் பதிக்கத் தூண்டியது.
மருத்துவக் கல்லூரி மாணவியாக அவர் கால் பதித்தபோது, அந்தக் கல்லூரி அவரை இருகரம்நீட்டி வரவேற்றது.
மருத்துவக் கல்லூரியில் சிறந்த மாணவியாக முத்துலட்சுமி திகழ்ந்தார். 1912_ல் மருத்துவராய் வெளியே வந்தார்.
அடுத்து, சென்னை எழும்பூர் தாய்சேய் நல மருத்துவமனையில் ஹவுஸ் சர்ஜனாக பணியாற்றியபோதுதான் அவருக்கு அரசியல் மீது ஆர்வம் பிறந்தது.
பெண்ணடிமைத்தனம் விலக வேண்டும், தேவதாசி முறை ஒழிக்கப்பட வேண்டும். பெண்களுக்கு எதிரான கொடுமைகள், அநீதிகள் அழிக்கப்பட வேண்டும். அதற்கு நாம் அரசியலில் இறங்க வேண்டும் என்கிற எண்ணம் அவருக்குள் உதயமானது.
முத்துலட்சுமியின் அயராத உழைப்பு.... அவரை மருத்துவத்துறையில் புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றது.
அறுவை சிகிச்சைத் தேர்வில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று 'முதல் இந்திய மருத்துவப் பெண்மணி' என்கிற வரலாற்றுச் சான்றிதழோடு வெளியே வந்தார்.
அடுத்து அவருடைய இலக்கு.. ஏழை எளிய மக்களுக்காக அதுவும் தனது பகுதி மக்களுக்கான சேவையில் தொடங்கியது. புதுக்கோட்டையைச் சுற்றியுள்ள கிராமங்கள் எல்லாம் அவர் கரம்பட்டு நலமானது..... அவர் சிகிச்சையால் புத்துயிர் பெற்றன.
அவரது வளர்ச்சியில்... சேவை மனப்பான்மையில்... புளங்காகிதம் அடைந்த அவரது பெற்றோர், அவருக்குத் திருமணம் செய்விக்க விரும்பினர். ஆனால், திருமணம், பெண்களை அடிமையாக்கும்_ஆணாதிக்கம் செலுத்தும் ஒரு சடங்கு என்று நினைத்ததால் அவர் மறுத்தார்.
இருப்பினும், அப்போதைய சென்னை மாகாண முதலமைச்சர் சுப்பராயுலு ரெட்டியாரின் மகன் டாக்டர் சுந்தர்ரெட்டியார்... முத்துலட்சுமியின் தந்தையை அணுகி... "முத்துலட்சுமியின் மனம் அறிந்தவன் நான். அவரைத் திருமணம் செய்ய விரும்புகிறேன்.." என்று பெண் கேட்டார்.
அவர் தனது விடுதலை உணர்வுக்கு எந்த விதத்திலும் தடையாகவோ இடைஞ்சலாகவோ இருக்கமாட்டார் என்று உணர்ந்த பின்பு முத்துலட்சுமி திருமணத்திற்குச் சம்மதித்தார்.
டாக்டர் முத்துலட்சுமியை திருமணம் செய்துகொள்ள டாக்டர் சுந்தர்ரெட்டி விருப்பம் தெரிவித்தபோது, மூன்று நிபந்தனைகளை அம்மையார் விதித்தார்.
1. தம்மை சரிசமமாக நடத்த வேண்டும்.
2. தன் சொந்த விருப்பங்களுக்குக் குறுக்கே நிற்கக் கூடாது.
3. தம்மை சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும்.
சுந்தர்ரெட்டி இவற்றுக்கு இணங்கிய பிறகே 1914 ஏப்ரலில் 'தியாசபிகல் சொசைட்டி (பிரம்ம சமாஜ) சட்டத்தின்படி திருமணம் நடந்தது. முத்துலட்சுமி திருமதி ஆனார். ராம்மோகன், கிருஷ்ணமூர்த்தி என்கிற இரண்டு மகன்களைப் பெற்றார்.
அவரது கணவருக்கு சென்னை மருத்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணி மாற்றலாக, முத்துலட்சுமி புதுக்கோட்டையிலிருந்து சென்னைக்கு இடம் பெயர்ந்தார். அந்த நேரத்தில் அவரது தங்கைக்கு புற்றுநோய் தாக்க... தான் ஒரு மருத்துவராக இருந்தும் அவரைக் காப்பாற்ற முடியாமல் பதறினார்.
புற்றுநோய் எனும் உயிர்க்கொல்லி நோயிலிருந்து இனி யாரையும் சாகவிடக் கூடாது என்கிற எண்ணம் அவருக்குள் உறுதியானது.
1925_ல் கணவர், குழந்தைகளுடன் லண்டனுக்குச் சென்று அங்கே செல்சியா மருத்துவமனையில் தாய், சேய் மருத்துவ ஆராய்ச்சியும், இராயல் புற்றுநோய் மருத்துவமனையில் புற்று நோய் பற்றிய ஆராய்ச்சியும் செய்ய ஆரம்பித்தார்.
அதோடு அங்கே நாற்பத்திரண்டு நாடுகள் கலந்துகொண்ட மகளிர் மாநாட்டில் இவரும் இந்திய மாதர் சங்கப் பிரதிநிதியாகக் கலந்து கொண்டார். அப்போது... உலகம் முழுக்கப் பெண்களுக்குச் சுதந்திரம் மறுக்கப்படுவதும், ஆண்கள் ஆதிக்கத்தால் பெண்கள் அடிமைகளாய் கட்டுண்டு கிடப்பதும், பெண்கள் வெறும் போகப்பொருள் என்கிற நிலையிலிருப்பதும் அவருக்குள் ஒரு புரட்சித் தீயை உருவாக்கியது.
இங்கிலாந்திலிருந்து புற்றுநோய்க்கான ஆராய்ச்சியை முடித்துவிட்டு இந்தியா திரும்பியதும் இந்திய மாதர் சங்கம் அவரை அரசியல் களத்திற்குள் இறக்கிவிட்டது. முத்துலட்சுமியின் வீரமும், விவேகமும் அவரை இந்தியத் திருநாட்டின் முதல் சட்டசபை உறுப்பினராக்கியது.
அந்த உறுப்பினர் எனும் கவசத்தால்... 'தேவதாசி...' 'பெண் அடிமை' 'பால்ய வயதுத் திருமணம்' எனும் பேய்களை ஓட்டினார்.
எல்லாவற்றிற்கும் மேலே... புற்றுநோய் நிவாரண மருத்துவமனையை அவர் சார்ந்திருந்த மாதர் சங்கம் சென்னையில் தொடங்கியது. அன்று சென்னை அடையாறில் தொடங்கப்பட்ட அந்தப் புற்றுநோய் மருத்துவமனை, இன்று பல்லாயிரக்கணக்கான புற்றுநோய் நோயாளிகளின் உயிர் காக்கும் தோழியாகச் செயல்பட்டு வருகிறது.
1954_ல் பன்னிரெண்டு படுக்கைகளோடு தொடங்கப்பட்ட அடையாறு புற்றுநோய் மருத்துவமனை இன்று புற்றுநோய் ஆய்வு மையம், புற்றுநோய் தடுப்பு, டாக்டர் முத்துலட்சுமி புற்றுநோய் அறிவியல் துறை கல்லூரி... என விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. இன்று அந்த மருத்துவமனையில் பயன்பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை வருடத்திற்கு எண்பதாயிரம் பேர்.
பெண் விடுதலைக்காகவும்.. ஏழை, எளிய மக்களுக்காகவும் தனது வாழ்வின் பெரும்பகுதியைச் செலவழித்த முத்துலட்சுமி ரெட்டிக்கு 1937_ம் வருடம் சென்னை மாநகரத் தலைமையாரால் 'ஆல்டர் வுமன்' என்கிற பட்டம் வழங்கப்பட்டது. இது மட்டுமன்றி 1956_ல் இந்திய அரசின் பத்மபூஷண் விருதுக்கும் அவர் சொந்தக்காரர் ஆனார்.
1936_ல் சென்னை அடையாறில் குடியேறிய பிறகு.. முழு நேர மருத்துவ உதவிகளோடு.. மீனவக் குழந்தைகளின் கல்விக்காகவும் பாடுபட்டார். நூலகங்களை உருவாக்கினார். டாக்டர் சௌந்திரம் இராமச்சந்திரன் துணையோடு காந்திகிராமப் பணிகளைத் தொடங்கினார்.
தனது இறுதி மூச்சு உள்ளவரை பொதுநலமும்.. பெண்களின் சுதந்திர வாழ்க்கையுமே அவரின் ஒரே மூச்சாக இருந்தது.
1968_ம் வருடம் தனது 82_வது வயதில் அந்த இதயம் நின்றபோது, அவருக்காக பல ஆயிரம் இதயங்கள் துடித்தன். கண்கள் கண்ணீர் விட்டன.
டாக்டர் முத்துலட்சுமி மறைந்தாலும் அடையாறு புற்று நோய் மருத்துவமனையில் அவர் ஆன்மா வாழ்ந்து கொண்டிருக்கிறது.
ஒரு பெரிய கட்டுரை என்றாலும், இதைப் படித்ததும் நமக்கு எத்தனை விஷயங்கள் விளங்குகிறது. எந்த வாய்ப்பும் இல்லாமல், தனது சொந்த முயற்சியால் வாழ்ந்து வழிகாட்டி முத்துலட்சுமி எங்கே...எல்லா வசதி, வாய்ப்பு, சுதந்திரம் இருந்தும் எந்த வளர்ச்சியும் இன்றி வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் எங்கே...
Friday, June 12, 2009
உடல் எடையும், எதிர்ப்புணர்வும்
அவர்களுக்கு எதிர்ப்புணர்வு குறைவாக உள்ளவர்களைக் காட்டிலும் உடல் எடையானது தொடர்ந்து அதிகரிக்கும் என்று அந்த தகவல் தெரிவிக்கிறது.
ஏற்கனவே நடத்தப்பட்ட ஆய்வின்படி, எதிர்ப்பு அல்லது பகைமை, விரோதம் கொண்டவர்களுக்கு இதய நோய்கள், உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் ஏற்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் அதுபோன்றவர்களுக்கு உயிரிழப்பு ஏற்படக்கூடிய ஆபத்தும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த 20 ஆண்டுகளில் சுமார் 35 வயது முதல் 55 வயதுடையவர்கள் சுமார் 6 ஆயிரத்து 484 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் உடல் எடைக்கும், உயரத்திற்கும் இடையேயான விகிதம் (Body Mass Index) குறித்த தகவல் வெளியானது.
ஆண்கள் மற்றும் பெண்கள் என்ற பாகுபாடு இல்லாமல், அதிக எதிர்ப்பு உணர்ச்சியைக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களின் உடல் எடை உயரத்திற்கும் மேலாக அதிகரித்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதுயெல்லாம் வயசுப்பிராப்புளம் தானோ…
வயசுன்னு சொல்லறப்ப நம்ம எல்லாருக்கும் பிடிச்ச மற்றும் மறக்கமுடியாத வயசு நம்ம வாலிப வயசுதான்.ஆனா இந்த வயசுதாங்க எல்லாருக்கும் ஏதோ ஒரு வகையில பிரச்சனை ஆகுதுங்க ..எப்படின்னா…
நம்ம குழந்தையா இருக்கும்போது ஏதாவது சொன்னா சின்னப்பிள்ளை இப்படி எல்லாம் பேசக்கூடாதுன்னு சொல்லிச்சி வாயை திறக்கவிடமாட்டாங்க….அப்பறம் வாலிப வயசு வந்ததும் நமக்கு வந்த மெச்சுரிட்டியை வச்சி மூடநம்பிக்கைக்கு எதிராகவோ அல்லது கருத்துல வேறுபட்டாலும் அதுக்கும் காரணம் வயசுதான்னு சொல்லுவாங்க…
சரின்னு எல்லா வயசையும் கடந்து வயசாப்ப பேசினாலும்,அப்பவும் இந்த வயசானவங்களே இப்படித்தான் எப்பபாத்தாலும் புழுபுழுன்னு பேசுவாங்கன்னு சொல்லுவாங்க…
இதுயெல்லாம் எதுக்கு சொல்லுறேன்னுனா…போனவாரம் நடந்த நீயா நானாவில் வயசனாவங்களுகும் இளம்தலை முறைகளும்மான முரண்பாடுகளை காணமுடிந்தது.என்னதான் இருந்தாலும் வயசானவங்கயெல்லாம் குழந்தைமாதிரிதான்….
இனிமேல் ரசிக்க ஆரம்பிக்கலாமே இந்த வயசா குழந்தைகளை…. …..
Monday, June 8, 2009
எப்படி இருந்த நான் இப்படி ஆகிவிட்டேன்
ஓ.. காதலி எல்லா சொத்துக்களையும் ஏமாற்றி பிடுங்கிக் கொண்டிருப்பார் என்று யூகம் சொல்லுவீர்கள்.
அதெல்லாம் ஒன்றும் இல்லை. இந்தியாவில் கொடிகட்டி பறந்த நாடக நடிகர் ஒருவர், தனது காதல் மனைவிக்காக, எல்லா சொத்து சுகங்களையும் இழந்து தற்போது ரஷியாவில் தெருவை பெருக்கி அதன் மூலம் வருமானம் பெறுகிறார்.
மும்பையை சேர்ந்தவர் அர்மன் குமார் ஜா. சில காலத்திற்கு முன்பு பல மேடை நாடகங்களில் நடித்து பிரபலமானார். பணம், புகழ், செல்வாக்கு என்று மதிப்பும் மரியாதையுடன் வசதியாக வாழ்ந்து வந்தார். இந்த நேரத்தில்தான் அவரது வாழ்க்கையில் காதல் நுழைந்தது. தலை விதி மாறியது.
ரஷியாவில் இருந்து கரோலினா என்ற பெண், இந்திய நடனத்தை பயில்வதற்காக மும்பை வந்தார். நடனம் பயின்று கொண்டிருந்தபோது, அவருக்கும், நாடக நடிகர் அர்மன் குமார் ஜாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் நாடு, மதம், மொழி ஆகியவற்றை தாண்டிதங்களது காதலை வளர்த்தனர்.
காதல் திருமணமாக கனிந்தது. இருவரும் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டு, மும்பையில் மகிழ்ச்சியாக வாழ்க்கையை தொடங்கினார்கள்.இதுவரை இன்பமாக இருந்த வாழ்க்கையில் விதி விளையாடியது.
கடுமையான குளிர் நாடான ரஷியாவில் வசித்த கரோலினாவால் இந்திய வெப்பத்தை தாங்கிக்கொள்ள முடியவில்லை. இதனால் அவர், கணவரை ரஷியாவுக்கு அழைத்தார். காதல் மனைவியின் அன்பு கட்டளையை மறுக்க முடியாத அர்மன் குமார் ஜா, மும்பையில் தான் சம்பாதித்த சொத்துகள் அனைத்தையும் விற்று பணமாக்கினார். மனைவி கரோலினாவுடன் ரஷியா புறப்பட முடிவு செய்தார். பாஸ்போர்ட், விசா என்று, ரஷியாவில் தங்குவதற்கான அனைத்து ஆவணங்களை பெறுவதற்குள்ளாகவே பெரும் பகுதி பணம் காலியாகிவிட்டது.
மிஞ்சிய பணத்தை வைத்துக்கொண்டு மனைவியுடன் அர்மன் குமார் ஜா, ரஷ்யா புறப்பட்டார். ரஷியாவில் இருவருக்கும் அரியா என்ற பெண் குழந்தை பிறந்தது. குழந்தையின் மீது மிகுந்த பாசம் கொண்ட அர்மன், மீதியிருந்த தொகையையும் தனது குடும்பத்தின் சந்தோஷத்திற்காக செலவு செய்தார்.
இந்தியாவில் பல ஆண்டுகள் நடித்து சம்பாதித்து சேர்த்து வைத்த பணம், ரஷ்யாவில் சில வாரங்களிலேயே செலவானது. அனைத்து பணமும் செலவான நிலையில் அவர்களது குடும்பம்வறுமையான நிலைக்கு தள்ளப்பட்டது.
ஏதாவது வேலைக்கு சென்று குடும்பத்தைக் காப்பாற்றலாம் என்று அர்மன் நினைத்தார். ஆனால், ரஷிய மொழி தெரியாததால் அவரை யாரும் வேலைக்கு சேர்த்துக்கொள்ளவில்லை. இதனால் அர்மன், நகரத்தில் இருந்து வெளியே வந்து குக்கிராமம் ஒன்றில் குடும்பத்துடன் வசிக்க சென்றார்.
அர்மனின் நிலையை நினைத்து வருந்திய உள்ளூர் டி.வி. சேனல் ஒன்று, வானிலை வாசிக்கும் வேலையை அவருக்கு வழங்கியது. ஆனால், ரஷிய மொழி சரளமாக தெரியாததால் அந்த வேலையிலும் அவரால் நிலைக்க முடியவில்லை. கடைசியில் குடும்ப வறுமையை சமாளிக்க, 2 டீக்கடை வாசல்களை பெருக்கி சுத்தம் செய்யும் வேலையை அர்மன் செய்து வருகிறார்.
தனது வறுமை நிலை குறித்து, கனத்த இதயத்தோடு பேசிய அர்மன், நான் நாடகத்தில் நடித்தபோது ஒரு நாளைக்கு ரூ.9 ஆயிரம் சம்பாதித்து விடுவேன். ஆனால், இங்கு ஒரு மாதம் தெரு பெருக்கினால்தான் அந்த தொகை கிடைக்கிறது. நடிகராக இருந்தபோது, ஒரு உடையை 2 முறை பயன்படுத்தி விட்டு, அப்படியே ஏழைகளுக்கு கொடுத்து விடுவேன். ஆனால், இன்றோ என்னுடைய செல்ல மகள் அரியா, 2-ம் தர துணிகளை உடுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளாள். நாடகங்களில் எத்தனையோ பாத்திரங்களை ஏற்று நடித்த எனக்கு, வாழ்க்கையில் ஏழை என்ற கனமான பாத்திரத்தை ஏற்று நடிப்பது வருத்தமாக உள்ளது என்று கண்ணீர் மல்க கூறினார்.
ரஷிய வாழ்க்கை வேண்டாம் என்று இந்தியாவுக்கே திரும்பி விடலாம் என்று அர்மன் நினைத்தார். ஆனால், ரஷ்யாவில் இருந்து இந்தியாவுக்கு செல்லும் ஆவணங்கள் அவரிடம் சரியாக இல்லாததால் மாஸ்கோ விமான நிலைய அதிகாரிகள், அர்மனை இந்தியாவுக்கு அனுப்ப மறுத்துவிட்டனர். இதனால், வறுமையிலேயேஅர்மன், ரஷ்யாவிலேயே வாழ்ந்து வருகிறார்.
அவர்களது வாழ்க்கையில், பணம் வேண்டுமானால் தோற்று வறுமையில் தள்ளியிருக்கலாம். ஆனால் காதல் தோற்கவில்லை என்பதுதான் உண்மை.
Sunday, June 7, 2009
இப்படியும் பேசுறாங்களே!!!???
இது என்ன உலகமடா சாமி…இந்த உலகத்தில நல்லதுக்கு காலமேயில்லைங்க….நம்ம எல்லாருக்கும் சேவையை பற்றி நல்லாவே தெரியும்….என்னா நம்ம எல்லாருமே சேவை செய்யுறோம்….எப்படிங்கிறிங்களா….இதோ…
நம்ம எல்லாரும் நம்ம கடமையை ஓழுங்க செய்யும்போதுங்க…ஒரு நல்ல மனைவியா,ஒரு நல்ல கணவனாய்,ஒரு நல்ல தாயா,நல்ல மருமகளாய் நம்ம இருக்கும்போதுதாங்க…எப்படின்னா…இப்படினம்ம இருக்கும்போது நம்ம நாட்டில குழந்தை காப்பங்களும்,முதியோர் இல்லங்களும் தேவையேபடாதுங்க..இதையெல்லாம் தாண்டி இந்த உலகத்தில டாக்டசும் ,நர்ஸ்சும் மனித உயிர்களை காப்பாத்துறாங்க…
இதுல இந்த டாக்டருக்கு கொடுக்க வேண்டிய பீஸையும் ,தாங்க்சையும் சொல்லி விடுகிறோம்…ஆனால்…
இந்த நர்ஸ்கள் எந்த அருவருப்பையும் பார்க்காமல் நம்மள துக்கி துடைத்து சுத்தம்பண்ணி பாக்குறாங்க…கடைசில ஒரு நன்றி கூட நம்மில் சிலர் சொல்லுறதுயில்லை….போனவாரம் நடந்த இனி ஒரு விதி செய்வோமில் நர்சுகளின் பங்களிப்பும்,குடும்பம் ,சமூக மற்றும் மிடியாக்களில் அவர்களின் நிலைக்குறித்து பேசப்பட்டது.அதுவே என்னை இப்பதிவினை எழுதத்தூண்டியது.இப்போது மிடியாக்களிலும் ,சினிமாவிலும் சிரிக்க வைக்கிறோம் என்றபெயரில் நர்ஸ்சுகளின் சேவையை மறக்கும் படியாக மக்களின் சிந்தனைகளை திசைதிருப்புகிறார்கள்(காமெடி என்றபெயரால்)….
என்னை பொறுத்தவரை பிறரின் மனசை புண்படுத்தும் எந்த ஒரு சுவையும் நகைச்சுவையாகாது…இதுவே உங்க கருத்து என்றால் ஓட்டுபோட்டு கருத்தை சொல்லுங்கோ….
Tuesday, June 2, 2009
தாய்ப்பால் கொடுங்கள்.. இதயம் பலமாகும்
குழந்தைக்கு தாய்பால கொடுத்தால, தனது அழகு குறைந்துவிடும் என்று கருதி சில தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு புட்டிப்பால் கொடுக்கும் அவலம்இன்னும் நடந்து கொண்டு தான் உள்ளது..
தாய்ப்பால் ஒரு அருமருந்தாகும். அதில் இல்லாத சத்துகளே கிடையாது, தாய்ப்பாலுக்கு ஈடு இணையான ஒரு உணவு உலகத்திலேயே வேறு எதுவும் இல்லை, அதைக் கொடுப்பதால் தாய்க்கு எந்த பாதிப்பும் கிடையாது, சொல்லப் போனால் பலனே அதிகம் என்று மருத்துவர்கள் அறிவுரை கூறினாலும், அதை காதில் வாங்கிக் கொள்வதே இல்லை.
இதற்கிடையில், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதால் என்னவெல்லாம் நன்மைகள் கிடைக்கின்றன என்கிற கோணத்தில் ஆய்வுகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
அந்த வகையில் அண்மையில் நடத்தப்பட்ட ஆராய்ச்சி ஒன்று சில வியப்பூட்டும் தகவல்களை வெளியிட்டுள்ளது.
பாலூட்டுவதால் ஒரு குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி தேவையான அளவில் கிடைப்பதுடன், அந்த குழந்தைக்கும், அதன் தாய்க்கும் இடையே ஒரு பாசப்பிணைப்பை ஏற்படுத்துகிறது.
அத்துடன், பாலூட்டுவதால் அந்த தாய்க்கு பிற்காலத்தில் இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள், காக்காவலிப்பு போன்ற நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் பெருமளவில் குறைகின்றன என்று கண்டுபிடித்து இருக்கிறார்கள் அந்த ஆராய்ச்சியாளர்கள்.
ஒரு வருடம் வரை தொடர்ந்து தனது குழந்தைக்கு பாலூட்டும் தாய்மார்களுக்கு இந்த பலன் அதிக அளவில் கிடைப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
Saturday, May 9, 2009
நீ தமிழனா……..
அன்புக்குரிய வாசகர்களே…..
அண்ணே…என்ன எழுத அதை எப்படி எழுத…என்னால முடியல …என் இனம் ஒவ்வொரு நிமிடமும் மடிந்து கொண்டிருக்கிறது….என் கண்களில் அழுது அழுது கண்ணீர் வற்றிவிட்டது….இன்னும் நம்மில் பலரும் போராடிக்கொண்டுதான் இருக்கிறோம்….ஆனாலும் விடிவு இல்லையே……
ஏன்….?ஏன்…..?
நான் USல யிருக்கேன்ண்ணே….இப்ப இங்க பன்னி காய்ச்சல் பரவுகிறது…முதல இதுக்கு மருந்து கிடையாது மரணம்தான் சொல்லிட்டாங்க…கொஞ்ச பேர் இறந்தும் போயிட்டாங்க…..இந்த மாதிரி செய்தியை கேட்டதும் எங்க்குள் முதன் முதலில் எனக்கு மரண பயம்வந்ததே பாருங்க….என்னதான் ஈழதமிழருக்கான போராட்டல கலந்து கிட்டாலும் மரணபயத்தை நான் நல்ல உணர்ந்தேன்ண்ணே……என் தமிழருக்காக முழுமூச்சா இறங்க ஆரம்பிச்சிட்டேன்……
இப்ப நான் தமிழச்சி… அப்ப நீங்க…
தமிழன் முத்துகுமார் மரணத்துக்கு ஒரு அர்த்தம் கிடைக்க,சீமான் போன்றோர் சிறைக்கு சென்றதுக்கு ,மகளிரி உண்ணாவிரத்த்திற்க்கு,
தமிழன் மானஸ்த்தன் என்பதற்க்கு…..
நமக்கு கிடைத்த ஒரே வாய்ப்பு ஓட்டுரிமைதான் …நீ தமிழன் என்றால் ஓட்ட பாத்து போடுங்க….
இந்த பதிவு பிடித்தால் ஓட்ட போட்டு கருத்தை சொல்லுங்க…..
பெண்களில் இரண்டு ரகம் உண்டு
தான் அழகாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லா பெண்களிடமும் இருக்கவே செய்கிறது.
இதில் இரண்டு வகையான பெண்கள் இருக்கிறார்கள். தான் போட்டிருக்கும் அலங்காரம் வெளியே தெரியவேக் கூடாது என்று அழகு செய்து கொள்பவர்கள் ஒரு ரகம்.
பளிச்சென அழகு தர வேண்டுமென்பதற்காக அழகுப்படுத்திக் கொள்பவர்கள் ஒரு ரகம்.
இதில் பளிச் ரகத்தினர் மிக எளிதாக ஆண்களுடன் பழகுபவர்களாக இருப்பார்கள்.
மிகவும் மென்மையாக அழகுப்படுத்திக் கொள்பவர்கள் ஆண்களிடம் பழகுவதற்கு தயங்குபவர்களாகஇருப்பார்கள்.
இதில் முதல் ரகப் பெண்களிடம் ஆண்கள் உரிமையுடனும், சகஜமாகவும் பேசுவார்கள். பழகுவார்கள். உண்மைதான்.
ஆனால் தனக்குப் பிடித்த பெண் என்று வரும்போது, கண்டிப்பாக மென்மையாக அழகுப்படுத்திக் கொள்பவளைத் தான் தேர்ந்தெடுப்பார்கள்.
அதிகமாக அழகுப்படுத்திக் கொள்ளும் பெண், சுதந்திர விரும்பியாகவும், மிகத் தைரியமானவளாகவும், போராடத் தயங்காதவளாகவும் இருப்பார்கள். இவை யாவும் பெண்ணுக்குத் தேவையான குணங்கள் என்ற போதிலும், இதனை பெரும்பாலும் ஆண்கள் விரும்புவதில்லை.
அடுத்ததாக, அனைவரையும் கவரக் கூடிய அழகுடன் மிளிரும் இந்த பெண்ணுக்கு தான் தகுதியானவன் இல்லை என நினைத்தும் ஆண்கள் ஒதுங்கிவிடுவார்கள்.
இயற்கையான அழகுடன் மிளிரும் பெண்ணைத்தான் ஆண்களுக்கு பிடிக்கிறது. ஆனால் இயற்கை அழகைத்தானே ஆண்கள் விரும்புகிறார்கள் என்று தனது ஆடை, சிகை அலங்காரத்தில் அலட்சியமாக இருப்பதையும் ஆண்கள் விரும்ப மாட்டார்கள்.
ஒரு ஆணை காதலிக்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால், முதலில் ஆடை, அலங்கார விஷயங்களில் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள்.
இந்த கட்டுரையைப் படித்ததும், ஓர் ஆணிற்காக நான் ஏன் மாற வேண்டும், ஆணின் இஷ்டப்படி எல்லாம் நான் என்னை அழகுப்படுத்திக் கொள்ள வேண்டுமா என்ற கேள்வி எல்லாம் காதலுக்கு பொருந்தாது.
உங்கள் விருப்பங்களை எல்லாம் புறம் தள்ளிவிட்டு, காதலரின் அன்பிற்கு முக்கியத்துவம் கொடுப்பதுதான் காதலுக்கு அழகு. பின் உங்கள் விருப்பத்திற்கு அவர் முழு சுதந்திரம் தருவார். அவருக்கு நீங்கள் முழு சுதந்திரம் தருவீர்கள். அப்போது காதல் என்பது நினைக்க நினைக்க இனிக்கும் அற்புத விஷயமாக இருக்கும்.
Thursday, May 7, 2009
அழகு ஆபத்தானதா?
பைபிள்ல இதுக்கு ஒரு கதை இருக்கு கேளுங்க.......
அதாவது சாராள் என்பவள் ஆபிரகாமின் மனைவி. ஆபிரகாம் தன்னுடைய சொந்த தேசத்தை விட்டு புதிய தேசத்தில் குடியேறினான். அவனுக்குள் அந்த தேசத்து மக்களை குறித்த பயம் எழுந்தது. ஏனென்றால் சாராள் மிகுந்த சவுந்தரியமும், அழகும் நிறைந்தவள். அவளுடைய அழகின் நிமித்தம் எங்கே ஆபிரகாமை கொன்று விடுவார்களோ என்ற பயத்தினால் தன் மனைவியை சகோதரி என்று மற்றவர்களிடம் கூறினான்.
சாராள் எல்லாக் காரியத்தையும் தேவனிடம் சொல்லி ஜெபிக்கும் பழக்கத்தை உடையவள்.
ஆபிரகாம் பயந்தது போலவே நேரிட்டது. அந்த தேசத்தின் ராஜா, ஆள் அனுப்பி சாராளை அழைப்பித்தான். சாராள் தொடர்ந்து ஜெபித்தபடியே சென்றாள்.
தேவன் இரவிலே ராஜாவை எச்சரித்தபடியால் சாராளுக்கு ஒர தீங்கும் செய்யாமல் அவளை அனுப்பிவிட்டான்.
மேற்கூறிய கதையில் ஓர் உண்மைக் கூற்று புதைந்திருப்பதைக் காணலாம்.
அதாவது நடக்காத ஓர் அசம்பாவிதமான காரியத்தை நினைத்து நினைத்து பயப்படுவதை விட்டுவிடுங்கள். ஏனென்றால் நாம் பயப்படுவது நமக்கு வந்து நேரிடும்.
பயத்தை புறம்பே தள்ளிவிட்டு கர்த்தர் மேல் நம்பிக்கை வையுங்கள்.
ஆபிரகாமையும் சாராளையும் காத்த தேவன் எல்லோரையும் சகல பயங்களில் இருந்து விடுவிப்பார்.
எதிர்த்து நிற்பது நாட்டின் ராஜாவே ஆனாலும் சரி நம்மை விடுவிக்க ராஜாவையே ஆளுகிற தேவன் உண்டு என்பதை மறக்கக் கூடாது.
எனவே அழகு ஆபத்து இல்லைங்க....
Monday, May 4, 2009
ஸ்வைன் ப்ளூ:3 வாரத்தில் தடுப்பூசி 'ரெடி?
ஸ்வைன் ப்ளூ எனப்படும் பன்றி காய்ச்சல் உலகம்
முழுவதும் மக்களை பீதியடைய செய்து வருகிறது. இதையடுத்து இந்த நோய் மேலும் பரவாமல் தடுக்க பல பன்னாட்டு மருந்து கம்பெனிகளும் தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன. இந்த வரிசையில் தற்போது இங்கிலாந்து விஞ்ஞானிகளும் கால்வைத்துள்ளனர்.ஸ்வைன் ப்ளூவுக்கு காரணமான H1N1 வைரஸ் அடிப்படையில் இரண்டு புரோதங்களால் ஆனது. அவற்றில் ஒன்று H எனப்படும் ஹேமக்குளேட்டனின் மற்றொன்று N எனப்படும் நியூராமினிடேஸ் என்ற புரதமாகும். அந்த வைரசின் பெயரில் இருக்கும் எண்கள் அதன் வகையை குறிக்கிறது.
இங்கிலாந்தின் ஹெர்ட்போர்டுஷையர் நகரில் இருக்கும் தேசிய உயிரியல் தரக்கட்டுபாடு நிறுவனத்தை சேர்ந்த இந்த விஞ்ஞானிகள் தற்போது அதிவேகமாக ஆராய்ச்சி செய்து வருகின்றனர். இவர்கள் கோழி முட்டைக்குள் லேசான துளைபோட்டு அதில் இந்த ப்ளூ வைரசை வளர்க்க திட்டமி்ட்டுள்ளனர்.
இது குறித்து ஜான் வுட் என்ற விஞ்ஞானி கூறுகையில், வைரஸ்கள் வளர்வதற்கு தேவையான அனைத்து வசதிகளும் கோழி முட்டைக்குள் இருக்கிறது. அவை வைரஸ் தொழிற்சாலைகள் என்றார்.
இந்நிலையில் விஞ்ஞானிகள் முட்டையில் துளைபோட்டு அதில் ஸ்வைன் ப்ளூ வைரசை போட்டு அவற்றை வளர செய்கின்றனர். பின்னர் அவர்கள் இரண்டு தொழில்நுட்பங்களின் மூலம் தடுப்பூசி தயாரிக்க உள்ளனர். முதல் தொழில்நுட்பத்துக்கு ரிவர்ஸ் ஜெனிடிக்ஸ் என்று பெயர்.
இதில் H மற்றும் N புரோதங்களை தனியாக பிரித்து, அவற்றை PR8 என்ற வைரசின் உதவியுடன் மீண்டும் இணைக்கின்றனர். அப்போது கிடைக்கும் நோய் தன்மையற்ற ஒட்டு வைரஸ் மூலம் மருந்து தயாரிக்க திட்டமிட்டுள்ளனர்.
மற்றொரு முறையில் H1N1 மற்றும் PR8 இரண்டையும் ஒரே சமயத்தில் முட்டைக்குள் போட்டு, அவற்றை இயற்கை வழியில் ஜீன் மாற்றம் அடைய செய்து, அதன் மூலம் உருவாகும் புதிய ஒட்டு வைரசிலிருந்து மருந்து தயாரிக்க இருக்கின்றனர்.
இந்த ஆராய்ச்சி விரைவில் முடிந்து இன்னும் 3 அல்லது 4 வாரங்களில் புதிய தடுப்பூசி தயாராகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தாலும் இவற்றை பெரிய அளவில் தயாரிக்க நான்கு முதல் ஐந்து மாதங்கள் கூடுதலாக தேவைப்படும் என கூறப்படுகிறது.
Saturday, May 2, 2009
படித்ததில் பிடித்தது
சிக்கனமே சிறந்தது
அமெரிக்காவின் ராக்பெல்லர் உலகப் பணக்காரர்களில் ஒருவர். ஒரு நாள் ராக்பெல்லரை பார்த்து தங்களது பள்ளிக்காக நன்கொடை வாங்க ஒரு மாணவர் குழுவினர் வந்திருந்தனர்.
ராக்பெல்லரின் வீடு இரவு நேரத்தில், சில விளக்குகளின் உதவியோடு சற்று இருட்டாகவே இருந்தது.
ராக்பெல்லர் ஒரு மெழுகுவர்த்தியை கொளுத்தி வைத்துக் கொண்டு மங்கலான ஒளியில் படித்துக் கொண்டிருந்தார்.
உள்ளே வந்த மாணவர்கள், இவரே இப்படி கஞ்சப்பிசினாரியாக உள்ளாரே, இவரா நமது பள்ளி கட்ட நன்கொடைத் தரப் போகிறார். வேண்டாம், இப்படியே திரும்பிப் போய்விடலாம் என்று கூட எண்ணினர்.
அப்போது, எதற்காக வந்திருக்கிறீர்கள் என்று ராக்பெல்லர் கேட்டார்.
கல்லூரியில் வகுப்பறை இல்லாமல் கஷ்டப்படுகிறோம், அதற்கு சுமார் 3 லட்சம் டாலர் செலவாகும். தாங்கள் ஒரு 500 டாலர் நன்கொடை கொடுத்தால் கூட நன்றாக இருக்கும் என்று மாணவர்கள் நம்பிக்கையே இல்லாமல் கேட்டனர்.
இதைக் கேட்ட ராக்பெல்லர் 3 லட்சம் டாலரையும் ஒரே செக்கில் எழுதி கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார்.
"நான் ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தால் உங்களுக்கு இந்த உதவியை செய்திருக்க முடியாது" என்று கூறினார்.
அவரது அடக்கமான பேச்சும், எளிமையும் அவரை செல்வந்தராக உயர்த்தி இருக்கும் என்பதை புரிந்து கொண்டவர்களாய் மாணவர்கள் வெளியே வந்தனர்.

